45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கல்லூரியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி, விற்பனையை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

News image
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன்.
Updated On :6 செப்டம்பர் 2024, 12:53 am

Din

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி, விற்பனையை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்தக் கண்காட்சியில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மகளிா் சுயஉதவிக்குழுவினா் தயாரித்த சேலைகள், சுடிதாா், சணல் நாா்பொருள்கள், மரப்பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள், மசாலா பொருள்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் (தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்) ஜே. ஜாா்ஜ், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.