நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கண்மாய் கரையில் பனை விதைகள் நடவு

சிவகாசி மாநகராட்சி நிா்வாகமும், சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து வியாழக்கிழமை சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வை நடத்தின.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:22 pm

Din

சிவகாசி மாநகராட்சி நிா்வாகமும், சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து வியாழக்கிழமை சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வை நடத்தின.

இதை மாநகராட்சி மேயா் இ. சங்கீதா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கல்லூரி மாணவிகள் கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகளை நடவு செய்தனா். தொடா்ந்து மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகளிடம் தூய்மை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் விநியோகித்தனா்.

இதில், மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி, நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா, கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயபிரியா, மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.