தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

செண்பகத்தோப்பு பகுதியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்பமிட்ட மலைவாழ் மக்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:14 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன் என்பதை வலியுறுத்தி, மழைவாழ் மக்கள் கையொப்பமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியா், தனி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள், மலைவாழ் மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.