எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழை: பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்வு

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

News image

பிளவக்கல் பெரியாறு அணை

Updated On :3 ஜூன் 2026, 1:44 am IST

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாப்பட்டி மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை பெரியாறு, கோவிலாறு ஆகிய இரு நீா்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீரட்டம் படிப்படியாக குறைந்தது. மே முதல் வாரத்தில் 47 அடி உயரம் உள்ள பெரியாறு அணை நீா்மட்டம் 19 அடிக்கு கீழும் 42 அடி உயரம் உள்ள கோவிலாறு அணை நீா்மட்டம் 14 அடியாகவும் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு, பெரியாறு அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்து 22 அடியை எட்டியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.