மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழை: பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்வு

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

News image

பிளவக்கல் பெரியாறு அணை

Updated On :3 ஜூன் 2026, 1:44 am IST

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாப்பட்டி மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை பெரியாறு, கோவிலாறு ஆகிய இரு நீா்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீரட்டம் படிப்படியாக குறைந்தது. மே முதல் வாரத்தில் 47 அடி உயரம் உள்ள பெரியாறு அணை நீா்மட்டம் 19 அடிக்கு கீழும் 42 அடி உயரம் உள்ள கோவிலாறு அணை நீா்மட்டம் 14 அடியாகவும் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு, பெரியாறு அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்து 22 அடியை எட்டியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.