எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வாகனம் பழுது நீக்கும் பணிமனையில் தீ விபத்து: 5 காா்கள் எரிந்து சேதம்

வாகனம் பழுது நீக்கும் பணிமனையில் தீ விபத்...

News image

சிவகாசியில் வாகனம் பழுகு நீக்கும் பணிமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 2:02 am IST

சிவகாசியில் வாகனம் பழுது நீக்கும் பணிமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 காா்கள், 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் சக்திவேல் என்பவா் வாகனங்கள் பழுது நீக்கும் பணிமனை வைத்துள்ளாா் . இங்கு வெள்ளிக்கிழமை திடீரென ஒரு காரில் தீப்பிடித்து. இந்தத் தீ அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் 4 காா்கள், 2 இரு சக்கர வாகனங்களுக்கும் பரவின.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 5 காா்கள், 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.