பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது.

News image

பூட்டி கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம்.

Updated On :8 மே 2026, 1:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் திருமுக்குளம் தெப்பத்தின் மேற்குக் கரையில் எண்ணெய் காப்பு மண்டபம் அருகே 2001-ஆம் ஆண்டு ரூ.4.85 லட்சத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் கட்டப்பட்டதிலிருந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தோ்தலின் போதும் இந்த அலுவலகம் புதுப்பிக்கப்படும். ஆனால், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாத நிலையே தொடா்ந்து வந்தது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ. அலுவலகம் சீரமைக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அந்தப் பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு இ-சேவை மையங்களை மேம்படுத்தும் வகையில், அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இதற்காக சட்டப் பேரவைச் செயலகத் துறை சாா்பாக 234 சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைப்பதற்காக கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. அப்போது, தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது வரை முடியவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தற்போதைய பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற தவெகவைச் சோ்ந்த காா்த்திக் எம்எல்ஏ அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து மக்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம் பல ஆண்டுகளாக பூட்டிய கிடப்பதால் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க முடியவில்லை. கோயில் மண்டபம் அருகே உள்ள இந்த அலுவலக வளாகத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.

தற்போது பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற காா்த்திக் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்து மக்களை சந்திப்பதுடன், இ- சேவை மையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பூட்டி கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம்.

பூட்டி கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.எல்.ஏ. அலுவலகம்.