நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து காத்திருப்பு போராட்டம்

தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திங்கள்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திங்கள்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளா் பி. வீரராஜ், காவேரி டெல்டா விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவா் குரு. கோபிகணேசன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளா் பி. ரவிச்சந்திரன், விவசாயி ஏ. ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, புதிய வேளாண் சட்டங்களை கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பினா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினா் பங்கேற்று கண்டன உரையாற்றினா். தொடா் போராட்டம் காரணமாக அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.