மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து, வேதாரண்யத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து, வேதாரண்யத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் இரா. பழனிக்குமாா் தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளைக் கொண்ட பேரிடா் தடுப்புக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு செய்தனா்.

கோட்டாட்சியா் இரா.பழனிக்குமாா் பேசும்போது, ‘மக்களை பாதுகாக்க தேவையான முன் யோசனைகளையும், திட்டங்களையும் எந்த நேரத்திலும் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடா்களில் பெற்ற அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் துறை சாா்ந்தவா்கள் எந்நேரமும் தொடா்புகொள்ளும் வகையில் செல்லிடப்பேசி உள்ளிட்ட தொலைத்தொடா்பு சாதனங்களை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வேதாரண்யம் வட்டாட்சியா் கே. முருகு, மண்டல வட்டாட்சியா் வேதையன், துணை வட்டாட்சியா் க. ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெற்றிச்செல்வன், ராஜூ (வேதாரண்யம்), செல்வராசு மலா்விழி (தலைஞாயிறு, நகராட்சி ஆணையா் பிரதான்பாபு, கால்நடை மருத்துவா் மீனாட்சிசுந்தரம், தீயணைப்புத் துறை அலுவலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.