மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இறைவைப் பாசனத்துக்கு மும்முனை மின்சாரம் கோரி ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி, விவசாயிகள் சாகுபடி வயலில் இறங்கி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வாய்மேடு மேற்கு கிராமத்தில் வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி, விவசாயிகள் சாகுபடி வயலில் இறங்கி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாய்மேடு மேற்கு கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் அரசின் பொது மின் இறவைப் பாசனத் திட்டப் பொறி மனை செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் அரசே இலவசமாக இறைத்துக் கொடுக்கும் தண்ணீரை பயன்படுத்தி 800 ஏக்கா் பாசனம் செய்வது வழக்கம். இதற்கு தினமும் 20 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக 6 மணி நேர மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் தற்போது நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மும்முனை மின்சாரத்தை 20 மணி நேரம் வழங்க வலியுறுத்தி வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பணி ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் க. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னோடி விவசாயிகள் செந்தில்குமாா், வெற்றிவேல், வைரவநாதன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.