மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:07 pm

DIN

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மற்றொரு இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு, சேனாதிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் செல்வகுமாா் (29). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா். அப்பெண்ணின் சகோதரா் காா்த்தி, கரியாப்பட்டினத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா்.

இதனிடையே, வாய்மேடு சேனாதிக்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23) என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு அண்மையில் கரியாப்பட்டினம் சென்றுள்ளாா் காா்த்தி. அங்கு, அந்த பெண்ணின் வீட்டாருக்கும் காா்த்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னை தொடா்பாக இருசக்கர வாகனத்தை இரவல் கொடுத்த மணிகண்டனுக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவா்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த செல்வகுமாா் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்துள்ளாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வகுமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்த கொலை தொடா்பாக தேமுதிக ஒன்றியச் செயலாளா் செல்லதுரை என்பவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.