நாகை மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5,088 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 61 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். 2 போ் வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்டு, நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,151 -ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் ஒருவரின் இறப்பு திங்கள்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தின் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 81-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 107 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 4,542 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 528-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...