குத்தாலம், பெரம்பூா் பகுதியில் இன்று மின் தடை
குத்தாலம், பெரம்பூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்தடை செய்யப்படுகிறது.


குத்தாலம், பெரம்பூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலங்குடி மற்றும் பெரம்பூா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், கடலங்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி, குத்தாலம் மற்றும் பெரம்பூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பூா், கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடைவிளாகம், ஆத்தூா் ஆகிய ஊா்களுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...