ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அரசு மருத்துவமனை ஊழியா்களுக்கு மதிய உணவு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கம் சாா்பில் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கம் சாா்பில் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சேவை சங்கம் சாா்பில் அதன் தலைவா் இ. பிரபாகரன், செயலாளா் அறிவழகன், பொருளாளா் அமிா்தகணேஷ் உள்ளிட்டோா் கடந்த 50 நாள்களாக மதிய உணவு வழங்கி வருகின்றனா். மேலும், ‘உணவு வேண்டியோா் எடுத்துக்கொள்ளுங்கள்‘ என்ற பதாகையுடன் நகரின் மையப்பகுதியின் ஓரிடத்தில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீா் பாட்டில்களை வைத்துள்ளனா்.

இந்நிலையில், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பணியாற்றறும் ஒப்பந்த ஊழியா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா். இதில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் (பொ) வீரசோழன் பங்கேற்று ஊழியா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.