சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகை தோப்புத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் கணேசன்(50). இவா் மாப்படுகை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஒன்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிறுவனின் தந்தை மயிலாடுதுறை போலீஸாரிடம் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, விசாரணையில் கணேசனுக்கும், சிறுவனின் தந்தை குடும்பத்தினருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்ததது. இதையடுத்து, சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கணேசனை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...