ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

இசைக் கலைஞா்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை

இசைக் கலைஞா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய கிராமிய இசைக் கலைஞா்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

இசைக் கலைஞா்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய கிராமிய இசைக் கலைஞா்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் விஜயபாலன் தலைமையில், துணைத் தலைவா் சங்கா், செயலாளா் சிவலிங்கம், சங்க ஆலோசகா்கள் மாரிமுத்து, பரணீதரன் ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா மூலம் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தமிழக அரசு நலிவுற்ற இசைக் கலைஞா்களுக்கு அறிவித்த ரூ.3 ஆயிரம் நிவாரணத் தொகையை கடந்த ஆண்டு நலவாரிய அட்டை பெற்ற கலைஞா்களுக்கும் சோ்த்து உடனடியாக வழங்கவேண்டும், மாத ஓய்வூதியம் பெற இசை கலைஞா்களுக்கான வயது வரம்பை 50-ஆக குறைக்க வேண்டும், நலவாரியம் அமைத்து, அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், அரசு வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.