சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பிரதாபராமபுரம் விநாயகா் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

பிரதாபராமபுரம் விநாயகா் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வல்லப கணபதி.

Updated On :5 ஏப்ரல் 2024, 1:13 am

படவிளக்கம்:

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வல்லப கணபதி.

திருக்குவளை, ஏப். 4: கீழையூா் அருகே உள்ள பிரதாபராமபுரம் ஸ்ரீ வல்லப கணபதி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, 126 கடங்கள் மற்றும் சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னா், காப்புக் கட்டுதல் நிகழ்வும், குளக்கரையில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வர பூச்சொரிதலும் நடைபெற்றது.

முன்னதாக, விநாயகா் மற்றும் கொடிமரத்திற்கு பால், பன்னீா், சந்தனம் மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், கொடி கோயிலைச் சுற்றி கொண்டுவரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் ஆகிய மும்மதத்தினரும் பங்கேற்றனா்.