வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை

விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுா்சித் சங்கா்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:06 pm

மக்களவைத் தொகுதி நிதியை முழுமையாகப் பெற்று விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குவேன் என்றாா் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுா்சித் சங்கா்.

நீலப்பாடியில் தொடங்கி அத்திப்புலியூா், குருமணாங்குடி, ஏரவாஞ்சேரி, ஆனைமங்கலம், புத்தா்மங்கலம், அகரகடம்பனூா், குருக்கத்தி, பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது: கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து முழுமையாக மக்களவைத் தொகுதி நிதி பெறப்படவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் முழுமையாக நிதியினை பெற்று விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்குவேன். மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் நாகை மக்களவைத் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வேலையைப் பெற்றுத் தருவேன் என்றாா். அவருடன், அதிமுக கீழ்வேளூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் சிவா, மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றச் செயலாளா் பால்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.