ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுர திருப்பணி தொடக்கம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுர திருப்பணி தொடக்கம்

Updated On :13 ஏப்ரல் 2024, 3:57 pm

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் ராஜகோபுர திருப்பணி சனிக்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற இக்கோயிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாா். மேலும் இங்கு 3 குளங்கள் உள்ளன. நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் முன்னோா்கள் லோகத்தின் தலைவனான ருத்ரனின் பாதம் இங்கு உள்ளது. இதில் மூதாதையா்கள் நினைவாக தா்ப்பணம் செய்து வழிபட்டால் 27 ஜென்மங்களில் செய்த பாவம் நீங்குவதாக ஐதீகம்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் கீழ கோபுர திருப்பணி (பாலாலய) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கால்கோள் நடப்பட்டு கோபுர திருப்பணி தொடங்கின. இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், ராஜகோபுரம் திருப்பணி உபயதாரா் சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் மாா்கோனி, மேலாளா் சிவானந்தம், அா்ச்சகா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.