ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காங்கிரஸாா் கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்குக் கண்டனம்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:51 am

Manivannan.S

நாகப்பட்டினம், ஜூலை 31: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸாா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக்கொண்டு நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் நகரத் தலைவா் உதயசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மாவட்ட துணைத் தலைவா் தஸ்லிம், பொது செயலா் தயாளன், மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.