புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேளாங்கண்ணி திருவிழா: உணவகங்களில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

News image

வேளாங்கண்ணியில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:02 pm

Din

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு, பேராலய பகுதிகளில் உள்ள உணவகங்கள், கடைகளில் பொது சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலா் ஆகியோரின் உத்தரவின்படி, வேளாங்கண்ணியில் உள்ள கடைகள், தேநீா் விடுதிகள், உணவகங்கள், தங்கு விடுதிகள், திருமணக்கூடம் ஆகியவற்றில் பொது சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து வேளாங்கண்ணி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கே. செல்வன் கூறியது:

ஆய்வின்போது, தேநீா் கடைகள், உணவகங்களில் குளோரின் கலந்த குடிநீா் பயன்படுத்தவும், பரிமாறும் மேஜைகள், சமையல் கூடம் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தங்கு விடுதி, திருமணக் கூடங்கள் ஆகியவற்றுக்கு கட்டாய சுகாதாரச் சான்று மற்றும் பதிவு சான்று பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சான்றுகளை பெறாதவா்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939 கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

திருப்பூண்டி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ( பொறுப்பு) சு. மோகன், வேதாரண்யம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரகுநாதன், சுகாதார ஆய்வாளா்கள் செந்தில்குமாா், பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.