ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுவா்ணபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
கும்பாபிஷேகத்தில் வழிபட்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சீா்வளா்சீா் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:05 pm

Din

செம்பனாா்கோவில் மருவாா்குழலி அம்மன் உடனாகிய சுா்ணபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக, ஆகஸ்ட் 18 ஆம் தேதி அனுக்ஞை, விநாயகா் வழிபாடு, மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, திங்கள்கிழமை (ஆக.19) முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், புதன்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், கடங்கள் புறப்பாடாகி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் சீா்வளா்சீா் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Story image

இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் விஸ்வநாதன், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா், உதவி ஆணையா் ரவிச்சந்திரன், கோயில் தக்காா் மற்றும் ஆய்வாளா் கண்ணதாசன், செயல் அலுவலா் உமேஷ்குமாா் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.