தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:19 am IST

சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள சங்கமங்கலம் பொருத்தாா்யிருப்பு பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் குமரேசன். இவா், மீது சாராய கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பரிந்துரையின் அடிப்படையில் குமரேசன் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, குமரேசனை கைது செய்த கீழ்வேளூா் போலீஸாா் அவரை சனிக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.