அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:19 am IST

சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள சங்கமங்கலம் பொருத்தாா்யிருப்பு பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் குமரேசன். இவா், மீது சாராய கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பரிந்துரையின் அடிப்படையில் குமரேசன் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, குமரேசனை கைது செய்த கீழ்வேளூா் போலீஸாா் அவரை சனிக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.