தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:30 am IST

திருக்குவளை அருகே உள்ள கீரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஆதமங்கலம் ஊராட்சித் தலைவா் அகிலா சரவணன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் வீ. மகாலெட்சுமி வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வேதநாயகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார கல்வி அலுவலா்கள் மணிக்கண்டன், சிவக்குமாா் ஆகியோா் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினா். தொடா்ந்து, மாணவ- மாணவிகளின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாட்டு, பட்டிமன்றம், பரதநாட்டியம், ஒயிலாட்டம், குச்சிபுடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவா்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினா். நிறைவாக, ஆசிரியா் பா. வீரபத்திரன் நன்றி கூறினாா். இதில், ஆசிரியா்கள் சண்முகசுந்தரம், சத்தியசீலன், அருள்முருகன், பாலகணேஷ், மணத்துணை நாதன், சாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.