நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கு பயிற்சி

வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கு பயிற்சி

Updated On :27 ஜூன் 2024, 6:01 am IST

திருமருகல், ஜூன் 26: திருமருகல் அருகே உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டத்தின்கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் ஜனனி பாலாஜி தலைமை வகித்தாா்.

திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா பங்கேற்று பேசும்போது, ‘வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் முக்கியத்துவம் மற்றும் உயிா் உரங்கள், இடுபொருட்கள், விதை இருப்பு, உழவன் செயலியின் முக்கியத்துவம்’ குறித்து விளக்கிக் கூறினாா்.

இதில் வட்டார தொழில் நுட்ப மேலாளா் செந்தில்குமாா், உதவி தோட்டக்கலை அலுவலா் சரவண ஐயப்பன், வேளாண் உதவி அலுவலா் தினேஷ் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், ராஜ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.