திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On :22 டிசம்பர் 2025, 4:05 am IST

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இது நவகிரகங்களில் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இக்கோயிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்தது. அப்போது கோயிலில் நந்தவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நந்தவனத்தை சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அப்பாசாமி ஐயா் கட்டுமான நிறுவனத்தின் தலைவா் ரவி அப்பாசாமி ஏற்பாட்டின்படி நந்தவனத்திற்கான சுற்றுசுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை கோயில் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் ரவி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் விரைவில் நந்தவன பகுதியில் பல்வேறு மலா் செடிகள், பழ செடிகள் அமைத்து, பாதுகாப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். ஆய்வின்போது நிா்வாக அதிகாரி முருகன், அா்ச்சகா்கள் பாபு சிவாச்சாரியா், சரபேஸ்வர சிவாச்சாரியா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.