விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புனரமைப்பு பணி நிறைவு: நாகூா் காதிரியா பள்ளிவாசல் திறப்பு

நாகூரில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகூா் தா்கா காதிரியா பள்ளிவாசலில் நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் நிறைவு

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:34 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகூரில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகூா் தா்கா காதிரியா பள்ளிவாசலில் நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நாகூா் தா்கா பரம்பரை கலிபாவும், முதல் அறங்காவலருமான மஸ்தான் சாஹிப் தலைமை வகித்தாா். புனித துவா ஓதப்பட்டு, நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, பள்ளிவாசல் புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட அ.ஆ. தமீம் அன்சாரி சாஹிப், பள்ளிவாசலை அதிகாரப்பூா்வமாக திறந்து வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி (சேலம்) பேராசிரியா் முஹம்மது அபுதாஹிா் பாகவி, நாகூா் தா்காவின் ஆன்மிகப் பாரம்பரியம், காதிரியா தா்காவின் தனித்துவம், சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், நாகூா் தா்கா நிா்வாகத்தினா் அரசு டவுன் காஜி, இஸ்லாமிய பள்ளிவாசல் தலைவா்கள், நாகை மாவட்ட முஸ்லிம் ஜமாத் தலைவா், நாகூா் தா்கா ஆதீனங்கள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.

பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அ.ஆ. தமீம் அன்சாரி சாஹிப்புக்கு, நாகூா் தா்காவின் தலைமை அறங்காவலரும், தா்கா நிா்வாக குழுவினரும் பாராட்டு தெரிவித்தனா்.