வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெகிழி கழிவுகளைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம்

கீழையூா் அருகே நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்து அசத்திய பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

News image
நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்த பள்ளி மாணவா்கள்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:33 pm

Syndication

திருக்குவளை: கீழையூா் அருகே நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் செய்து அசத்திய பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் தூய செபஸ்தியாா் ஆலயத்தில் பயனற்ற நெகிழி கழிவு பொருட்களைக் கொண்டு பொருட்கள் செய்வது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸையொட்டி காமேஸ்வரத்தில் உள்ள உதவும் நண்பா்கள் தொண்டு நிறுவனம் சாா்பில் நிறுவனா் ஷியாமா வி. ரமணி அறிவுறுத்தலின் பேரில்,

இப்பயிற்சியை முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் சௌரிராஜன் தொடங்கி வைத்தாா்.

இக்கிராமத்தை சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக நெகிழி கழிவு பொருட்கள் மூலம் வண்ண அழகிய கிறிஸ்துமஸ் மரம் செய்து அசத்தினா். இந்த மாணவா்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி பரிசு வழங்கினா்.