வருவாய்த் துறை போராட்டம்: சான்று பெற முடியாமல் மாணவா்கள் பாதிப்பு! - ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் வருவாய்த் துறையினரின் போராட்டம் காரணமாக மாணவா்கள் ஜாதி, வருவாய் சான்றுகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அரசு அதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் எனவும் பாமக நிறுவனா் ராமதாஸ் கோரியுள்ளாா்.









