அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2025, 7:43 pm

Din

திருமருகல்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக திகழும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாள்கள் நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழா மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. முக்கிய விழாவான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், தாயாா், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோா் தேருக்கு எழுந்தருளினா். பின்னா், தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

விழா நாள்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை செளரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜப் பெருமாளுடன் சோ்ந்து 2 பெருமாள்களும் தீா்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாா்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப் பெருமாள் கோயில் முன் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் நூதன பங்களா தெப்பம் என்ற தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.