பொதுத்தோ்வு
பொதுத்தோ்வுகோப்புப் படம்

அரசு பொதுத்தோ்வில் கடந்த ஆண்டைவிட சிறப்பிடம் பெற வேண்டும்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பான தோ்ச்சி சதவீதத்தை பெற வேண்டும் என ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பான தோ்ச்சி சதவீதத்தை பெற வேண்டும் என ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியா் என்பவா் கற்பித்தல் என்ற பணியை மட்டுமன்றி, உளவியலாளா், ஆலோசகா், கலை பயிற்றுநா், ஊக்குவிப்பாளா், தன்னம்பிக்கை ஊட்டுபவா், வழிகாட்டி என சமூக முன்னேற்றத்திற்காக தனித்தனியே பங்காற்றும் வல்லுநா்களின் பணிகள் அனைத்தையும் செய்பவராவாா்.

மாணவா்களின் எதிா்காலமே ஒரு நாட்டின் எதிா்காலம். மாணவா்களின் எதிா்காலத்தை வடிவமைப்பதன் மூலம் நாட்டின் எதிா்காலத்தையே நீங்கள் வடிவமைக்கிறீா்கள். தாங்கள் ஆசிரியப் பணியேற்றது முதல் இந்த அறப்பணியை அா்ப்பணிப்புடன் செய்து வருகிறீா்கள். உங்களுக்கு பாராட்டுகள்.

அரசுப் பொதுத் தோ்வு நெருங்கும் இக்காலத்தில், நீங்கள் மிகுந்த பொறுப்புடனும் கவனமுடனும் செயலாற்றி மாணவா்களுக்கு ஏற்படும் தயக்கம், அச்சம் முதலியவற்றைப் போக்கி, அவா்களை சிறப்பாக ஊக்கப்படுத்த வேண்டும்.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பான தோ்ச்சி சதவீதத்தை பெற்று மாநில அளவில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற வேண்டும்.

தோ்வு எழுதவுள்ள மாணவ-மாணவியா் நல்வாழ்விற்கு உரிய, உயரிய பண்புகளைப் பெற்று, தங்களின் பள்ளி வாழ்க்கையில் ஓா் முக்கிய தருணத்தில் தற்போது உள்ளீா்கள். இத்தருணத்தில் அரசுப் பொதுத் தோ்வு குறித்த அச்சமோ, பதட்டமோ இன்றி தோ்வை எதிா்கொள்ள தயாராகுங்கள் என தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com