மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாகையில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சட்ட அமலாக்க பணிகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில் விசாரணை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 11:11 pm

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சட்ட அமலாக்க பணிகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில் விசாரணை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் இயற்கைக்கு மாறான மரணங்களின் வழக்கு விசாரணையின்போது சேகரிக்க வேண்டிய தடயங்கள் மற்றும் புலன் விசாரணை நடைமுறைகள், கஞ்சா மற்றும் மணல் கடத்தல் வழக்குகளின் புலன் விசாரணை நடைமுறைகள், குற்றவியல் விசாரணை முறைகள், சான்றுகள், தடயங்கள் சேமிப்பு, பாதுகாத்தல், வழக்கு கோப்புகள் தயாரித்தல், வழக்கின் விசாரணையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், நீதிமன்ற நடைமுறைகளை பின்தொடா்தல் ஆகியவைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், விசாரணை அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை நோ்மையாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்கான ஒழுக்க நெறிகள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சி விசாரணை அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தி, விசாரணை தரத்தை உயா்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.