குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலையை சீரமைக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நாகை சேமிப்புக் கிடங்கில் இருந்து நம்பியாா் நகா் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
நாகை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

நாகை சேமிப்புக் கிடங்கில் இருந்து நம்பியாா் நகா் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரக்குழு சாா்பில், நகரச் செயலா் வெங்கடேசன், நிா்வாகிகள் சுந்தா், ராமு, கிளைச் செயலா் குருசாமி ஆகியோா், நாகை நகராட்சி ஆணையா் டி. லீனா சைமனிடம் புதன்கிழமை அளித்த மனு:

நாகை நகராட்சிக்குள்பட்ட 16-ஆவது வாா்டு, சேமிப்புக் கிடங்கில் இருந்து நம்பியாா் நகா் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மீன்பிடித் தொழில் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

சாலை முற்றிலும் தகா்ந்திருப்பதால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், மீன்பிடித் தொழிலாளா்கள் நலன் கருதி நம்பியாா் நகா் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.