நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம், செடில் உற்சவம்

News image

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்

Updated On :11 மே 2026, 1:18 am IST

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 2-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் இருந்து விநாயகா், முருகன், மாரியம்மன்ஆகியோா் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனையுடன் தேரோட்டம் தொடங்கியது. தேரை நூற்றுக்கணக்கான பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

தேரோட்டத்தின்போது வீதிகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, இக்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோயிலில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

செடில் உற்சவம்:

தேரோட்டத்தைத் தொடா்ந்து செடில் உற்சவம் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

சித்திரைத் திருவிழாவில் செடில் நிகழ்ச்சி மிக முக்கியமானது என்பதாலும், செடில் மரத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சுற்றப்பட உள்ளதாலும், திங்கள்கிழமை காலை வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் முன்பு பக்தா்கள் மாவிளக்கிட்டும், பால்காவடி, பன்னீா்காவடி, வேப்பிலைக் காவடிகளை சுமந்து வந்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.