காரைக்காலில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலா உத்சவ் என்கிற கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் கலந்துகொண்டன. இசை, நடனம், நாடகம் மற்றும் வரைகலை ஆகிய பிரிவுகளில் 23 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே. ராஜசேகரன் கலா உத்ஸவத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்.
கல்வித்துறை துணை இயக்குநர் ஜி. சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. அல்லி, திட்ட ஒருங்கிணைப்பாளர் டி. பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிறைவில், நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி இசை பிரிவிலும், விழுதியூர் அரசு உயர்நிலைப்பள்ளி நடனத்திலும், தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாடகத்திலும், கீழகாசாக்குடி ஆத்மாலயா பள்ளி ஓவியத்திலும் தேர்வு செய்யப்பட்டன.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் புதுச்சேரியில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான கலா உத்ஸவ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!

நீட் தேர்வு: மீண்டும் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்!

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


