மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேருந்தில் சென்ற இரு பெண்களிடம் ரூ.90 ஆயிரம் திருடிய பெண் கைது

பேருந்தில் சென்ற இரண்டு பெண்களிடம் ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:28 pm

DIN

பேருந்தில் சென்ற இரண்டு பெண்களிடம் ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே சுரக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜகாந்த். இவரது மனைவி கங்கை. இவர் காரைக்காலில் உள்ள ஒரு வங்கியில் தமது கணக்கிலிருந்து ரூ.85 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, தமிழக அரசுப் பேருந்தில் திருநள்ளாறு பகுதியில் சுரக்குடிக்கு சென்றுள்ளார். இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுசாமி மனைவி சாந்தி என்பவர் ரூ.4,700 பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இவ்விருவரும் சுரக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது  பொருள்கள் வைத்திருந்த பெரிய பையில் வைத்திருந்த பேக்குகள் காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அதில் பணம் இருந்ததாகக் கூறி கூச்சலிட்டதால் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் உள்ளவர்களிடம் நடத்துநர் விசாரித்தபோது,  ஒரு பெண் மட்டும் பேருந்திலிருந்து இறங்க முயற்சித்துள்ளார்.
சந்தேகத்தின்பேரில் இவரை நிறுத்தி விசாரித்தபோது, இருவரது பேக்கையும் திருடியதை ஒப்புக்கொண்டார். தகவலின்பேரில், திருநள்ளாறு காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, பெண்ணிடம் விசாரணை செய்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி கனகா (26) என அவர் தெரிவித்துள்ளார். இவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.89,700 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இவரிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.