காரைக்காலில் சனிக்கிழமை இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்கான விளக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், மாணவர்கள் பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் துறைமுக நிறுவனம், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, 12 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களைத் தேர்வுசெய்து, இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சி எடுத்துள்ளது. திறனுள்ள 100 மாணவர்களைக் கண்டறிந்து மின்னணுவியல், ஏரோஸ்பேஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவுகளில் இலவசமாக பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சியளிக்க உள்ளது. இதுசம்பந்தமான விளக்க நிகழ்ச்சி வரும் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை காரைக்கால் தங்கவேல் கலையரங்கில் நடைபெறவுள்ளது. அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






