அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தட்டச்சுத் தேர்வு: 400 பேர் பங்கேற்பு

காரைக்காலில் 2 நாள்களாக நடைபெற்ற தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவில்  400 பேர் பங்கேற்றனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 6:31 am IST

காரைக்காலில் 2 நாள்களாக நடைபெற்ற தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவில்  400 பேர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை சார்பில் தமிழகம், புதுவையில் பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் தட்டச்சுத் தேர்வு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தட்டச்சுப் பயிற்சியாளர்கள் நாகை மாவட்டத்தில் நடந்த தேர்வு மையத்தில் பங்கேற்றுவந்தனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையத்தில் உள்ள காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியை மையமாக தமிழக தொழில்நுட்பக் கல்வித் துறை அங்கீகரித்தது.
இதன்படி, 2-ஆவது முறையாக காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் சனி, ஞாயிற்றுக்கிழமையில் தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற தேர்வில் 400 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். முதல் நாள் சனிக்கிழமை 5 பிரிவுகளாகவும், 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 பிரிவுகளாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இளநிலைக்கு முதல் தாள் தேர்வு 10 நிமிடமும், 2-ஆம் தாள் தேர்வு 45 நிமிடமும் நடைபெற்றது. 
முதுநிலைக்கு முதல் தாள் தேர்வு 10 நிமிடமும்,  2-ஆம் தாள் தேர்வு 1 மணி நேரமும் நடைபெற்றது. அதிவேகத் தேர்வில் பங்கேற்றோருக்கு மொத்தமாக 10 நிமிடம் தரப்பட்டது.
இந்த தேர்வு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நடைபெற்றது. காரைக்கால் தேர்வு மையத்தின் தலைமை கண்காணிப்பாளராக காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி, உதவி கண்காணிப்பாளராக விரிவுரையாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தேர்வு உதவியாளராக 6 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது.
விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு சென்னை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என தேர்வுக்கூட கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.