காரைக்காலில் 2 நாள்களாக நடைபெற்ற தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவில் 400 பேர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை சார்பில் தமிழகம், புதுவையில் பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் தட்டச்சுத் தேர்வு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தட்டச்சுப் பயிற்சியாளர்கள் நாகை மாவட்டத்தில் நடந்த தேர்வு மையத்தில் பங்கேற்றுவந்தனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையத்தில் உள்ள காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியை மையமாக தமிழக தொழில்நுட்பக் கல்வித் துறை அங்கீகரித்தது.
இதன்படி, 2-ஆவது முறையாக காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் சனி, ஞாயிற்றுக்கிழமையில் தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற தேர்வில் 400 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். முதல் நாள் சனிக்கிழமை 5 பிரிவுகளாகவும், 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 பிரிவுகளாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இளநிலைக்கு முதல் தாள் தேர்வு 10 நிமிடமும், 2-ஆம் தாள் தேர்வு 45 நிமிடமும் நடைபெற்றது.
முதுநிலைக்கு முதல் தாள் தேர்வு 10 நிமிடமும், 2-ஆம் தாள் தேர்வு 1 மணி நேரமும் நடைபெற்றது. அதிவேகத் தேர்வில் பங்கேற்றோருக்கு மொத்தமாக 10 நிமிடம் தரப்பட்டது.
இந்த தேர்வு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நடைபெற்றது. காரைக்கால் தேர்வு மையத்தின் தலைமை கண்காணிப்பாளராக காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி, உதவி கண்காணிப்பாளராக விரிவுரையாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தேர்வு உதவியாளராக 6 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது.
விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு சென்னை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என தேர்வுக்கூட கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


