மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் அருகே இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 5:43 am IST

காரைக்கால் அருகே இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புத்தொளி தன்னிறைவு சமுதாயத்தின் நிறுவனத் தலைவர் கே. உத்திராபதி அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் பகுதி வடமட்டம் சாலை, முக்கூட்டு ஆலமரம் கிராமத்தில், கிராமத்தினரிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பொங்கல் தினத்தையொட்டி நடைபெற்றது.
இதற்கான பரிசளிப்பு மற்றும் மகளிர், இளைஞர்கள் உள்ளிட்டோர் கல்வி மேம்பாடு, தொழில் தொடங்குதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கிராம இளைஞர்களிடையே உறி அடித்தல், கோலப் போட்டி, சாக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. 
அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலர் எஸ். எழிலரசன் தலைமை வகித்தார். மருத்துவர் தமிழ்வேலன், செயலர் கே. மணவாளன் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துகளை விளக்கிப் பேசினர். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். அமிலன் வரவேற்றார். பி. தம்பி தேவேந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.