15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் அருகே இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 5:43 am IST

காரைக்கால் அருகே இளைஞர்கள், கிராமத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புத்தொளி தன்னிறைவு சமுதாயத்தின் நிறுவனத் தலைவர் கே. உத்திராபதி அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் பகுதி வடமட்டம் சாலை, முக்கூட்டு ஆலமரம் கிராமத்தில், கிராமத்தினரிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பொங்கல் தினத்தையொட்டி நடைபெற்றது.
இதற்கான பரிசளிப்பு மற்றும் மகளிர், இளைஞர்கள் உள்ளிட்டோர் கல்வி மேம்பாடு, தொழில் தொடங்குதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கிராம இளைஞர்களிடையே உறி அடித்தல், கோலப் போட்டி, சாக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. 
அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலர் எஸ். எழிலரசன் தலைமை வகித்தார். மருத்துவர் தமிழ்வேலன், செயலர் கே. மணவாளன் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துகளை விளக்கிப் பேசினர். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். அமிலன் வரவேற்றார். பி. தம்பி தேவேந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.