நிரவி அருகே உள்ள ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்க்கில் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றும் பிரிவு தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நிரவி ஓ.என்.ஜி.சி. பேருந்து நிறுத்தம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டீலரான சாரதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க்கில், சர்வோ எக்ஸ்பிரஸ் மூலம் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தரும் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பங்க் டீலர் பா. குணசீலன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொதுமேலாளர் ஏ.எம்.சந்தோஷ்குமார், உயர்நிலை விற்பனை அதிகாரி சிவமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பிரிவைத் திறந்துவைத்தனர்.
நிகழ்ச்சியில், சர்வோ டி.ஆர்.வி.4 கிராஃப்ட் ஆயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மையம் திறப்பு குறித்து பா. குணசீலன் கூறும்போது, சர்வோ சார்பில் பங்கில் 5 நிமிடத்தில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தரும் வகையில் இயந்திரத்துடன் தனிப் பிரிவு அமைத்து தரப்பட்டது. வாகனங்களில் உள்ள எண்ணெய் 3 நிமிடத்தில் பம்ப் செய்து வெளியேற்றப்பட்டு புதிதாக எண்ணெய் நிரப்பப்படும்.
இந்த வசதி வாகனதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


