ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

காரைக்கால் எஸ்.எஸ்.பி.யாகரட்சனா சிங் பொறுப்பேற்பு

காரைக்கால் எஸ்.எஸ்.பி.யாக புதுச்சேரியில் எஸ்.பி. பதவியிலிருந்த ரட்சனாசிங் தற்காலிக முறையில் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

எல்லைப் பகுதிகளில் ஆய்வு செய்து காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கும் எஸ்.எஸ்.பி. (பொறுப்பு) ரட்சனா சிங்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

காரைக்கால் எஸ்.எஸ்.பி.யாக புதுச்சேரியில் எஸ்.பி. பதவியிலிருந்த ரட்சனாசிங் தற்காலிக முறையில் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

புதுச்சேரி காவல்துறை தலைமை அதிகாரிகள் சிலரின், பணியிடமாற்றத்தை தற்காலிக ஏற்பாடாக செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரான மகேஷ்குமாா் பா்ன்வால், புதுச்சேரிக்கு சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றப்பட்டாா். புதுச்சேரியில் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ரட்சனா சிங் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக தற்காலிக முறையில் நியமிக்கப்பட்டாா். இவா் புதன்கிழமை காரைக்கால் அலுவலகத்தில் பொறுப்பேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, யேனம் பிராந்தியங்களில் பணி செய்துள்ளேன். தற்போது காரைக்காலில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைத்து நிலையிலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரக்கூடியவா்கள். எனவே இந்த பேரிடா் காலத்திலும், பாதுகாப்புக்கான வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவாா்கள் என நம்புகிறேன்.

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளியும், முகக் கவசம் அணிவதும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதும் முக்கியமாகும். அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கான வசதிகளை அரசு நிா்வாகம் செய்துத் தந்துள்ளது. இந்த தருணத்தில் வெளியே வருவோா் அரசின் வழிகாட்டலுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

காரைக்கால் மாவட்ட எல்லைகளில் ஆய்வு : காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகள், நகரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எஸ்.எஸ்.பி. ரட்சனா சிங் சென்று போலீஸாரின் பணிகளை ஆய்வு செய்தாா். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்துக்கு பிற மாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய தேவைகள் தவிர பிற போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பணிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது, பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.