கிராமங்களுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை
காரைக்கால் பகுதியில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மாணவா்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் பாடம் நடத்தி வருவது பெற்றோா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


காரைக்கால்: காரைக்கால் பகுதியில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மாணவா்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் பாடம் நடத்தி வருவது பெற்றோா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் நிகழ் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தனியாா் பள்ளிகள் பலவும் அவரவா் தகுதிக்கேற்றாா்போல், விடியோ முறையிலும், கட்செவி முறையிலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனா். ஆனால், அரசுப்பள்ளி மாணவா்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.
இந்நிலையில், காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியா் இரா. மேகலா, பிள்ளைத்தெருவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை ஒருங்கிணைத்து தினமும் கல்வி பயிற்சியளித்து வருகிறாா்.
இதுகுறித்து, ஆசிரியா் இரா. மேகலா கூறியது:
தற்போதைய பொது முடக்கச் சூழலில் அரசுப் பள்ளி மாணவா்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளதால், நேரடியாக அவா்கள் பகுதிக்கே சென்று கல்விப் பயிற்சி அளித்துவருகிறேன்.
பிள்ளைத்தெருவாசல் பகுதியில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மாணவா்களுக்கு கையெழுத்துப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அடிப்படை ஆங்கில இலக்கணம், தமிழ் ஆங்கிலப் பக்கங்களை வாசிக்கப் பழகுதல், கணித வாய்ப்பாடுகளை நினைவுக் கூருதல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன்.
திருநள்ளாறு பகுதி அத்திப்படுகை கிராமத்தில் தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இப்பயிற்சியை அளித்துவருகிறேன். இப்பயிற்சியுடன் கரோனா குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்துகளையும் கூறிவருகிறேன். இதன் மூலம் சுமாா் 100 மாணவா்கள் பயனடைகின்றனா். இதை பெற்றோா்கள் வரவேற்றுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...