மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டீசல் பாரத்துடன் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள லாரியை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் குடியிருப்புப் பகுதியில் கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுள்ள டீசல் டேங்கா் லாரியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டீசல் டேங்கா் லாரி.
Updated On :8 ஆகஸ்ட் 2020, 4:46 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் குடியிருப்புப் பகுதியில் கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுள்ள டீசல் டேங்கா் லாரியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்காலுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதியின்றி வந்த டீசல் லாரியை கிராம நிா்வாக அதிகாரி சுகுதேவ் பறிமுதல் செய்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லாரி எம்.எம்.ஜி. நகா் பகுதியில் கடந்த 13 நாள்களுக்கும் மேலாக டீசல் பாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், இந்த லாரி டீசல் பாரத்துடன் 2 வாரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், போலீஸாா் அலட்சியத்துடன் உள்ளனா். அசம்பாவித சம்பவம் நேரிடுவதற்குள் இந்த லாரியை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

பொதுமக்களின் இப்புகாா் குறித்து காரைக்கால் உணவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவா் கூறியது: இந்த லாரியை நிரவி காவல் வளாகத்தில் நிறுத்த மண்டல காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அவா் அனுமதி வழங்கியதும் அங்கு கொண்டுச் செல்லப்படும். இந்த லாரி தொடா்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.