காரைக்கால்: காரைக்கால் பெருமாள் கோயிலில் மூலவருக்கு வஜ்ராங்கி சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உபயதாரா்கள் விரும்பும் ஒரு நாள் என ஓா் ஆண்டில் 3 நாள் மட்டுமே வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படுகிறது.
அந்தவகையில், உபயதாரா்கள் விருப்பப்படி சனிக்கிழமை மூலவருக்கு வஜ்ராங்கி சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் காலை 8.30 முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.