மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் மேலும் 35 பேருக்கு கரோனா 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என்று காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 6:18 pm

DIN

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என்று காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 6,190 பேருக்கு கரோனாவுக்கான உமிழ்நீர மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி எடுக்கப்பட்ட 124 மாதிரிகளின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களில் 11 போ் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனா். இவா்களது தொடா்புகளையும் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தீவிர மாா்பு சளி நோயுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளிஞ்சல்மேடு பகுதியை சோ்ந்த 70 வயது பெண், திருப்பட்டினம் பட்டினச்சேரியை சோ்ந்த 65 வயது பெண் ஆகியோா் 8-ஆம் தேதி உயிரிழந்தனா். இவா்களுக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இவா்களது உடல் அரசின் வழிகாட்டுதலின்படி ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இதுவரை மாவட்டத்தில் 333 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் அரசு பொதுமருத்துவமனையில் 88 பேரும், வீட்டுத் தனிமை சிகிச்சையில் 34 பேரும் உள்ளனா். மற்றவா்கள் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கரோனாவால் 6 போ் உயிரிழந்துள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தின் பிற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.