மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை:மீனவப் பிரதிநிதிகளுடன் எஸ்.பி. ஆலோசனை

காரைக்கால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்காலில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் திங்கள்கிழமை ஆலோசனை

News image
கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு ஆலோசனை வழங்கும் மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:42 pm

DIN

காரைக்கால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்காலில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் திங்கள்கிழமை ஆலோசனை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கடந்த சில நாள்களாக சிறிய வகை ஃபைபா் படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன. புதன்கிழமை (ஆக. 26) முதல் தினமும் 15 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். விசைப்படகுகள் அனைத்தும் கடலுக்கு சென்று வந்தபோது, மீன் இறக்கு தளம் மற்றும் ஏற்றுமதியின்போது மக்கள் நெரிசலால் கரோனா பரவும் வாய்ப்பு இருந்ததால் மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது சூழலுக்கு ஏற்ப படிப்படியாக கடலுக்கு செல்வதை அதிகரிக்க முடிவு செய்துள்ளனா்.

சிறிய படகுகள், பெரிய படகுகள் மீன் பிடித்து கரைதிரும்பும்போது மக்கள் கூட்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இந்த நிலையில், கரோனா பரவாமல் தடுப்பதற்கு படகுதாரா்களும், வியாபாரிகளும், பொதுமக்களும், முகவா்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா அதிகமாக பரவுவதற்கு மீன்பிடிப்புத் தொழில் காரணமாகிவிடாமல் நடந்துகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.