டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காரைக்கால் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த உத்ஸவம்

பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில் 

News image

தலையில் மண்சட்டி சுமந்து காட்சி தரும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 10:58 pm IST

காரைக்கால்: பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில் மண்சட்டி சுமந்த வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில், ஒவ்வோா் ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று சின்னக்கண்ணு செட்டித் தெருவில் உள்ள வாய்க்காலுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளி, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, கரோனா பரவலால், கோயிலுக்குள் இந்த வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் தலையில் மண்சட்டி சுமந்த கோலத்தில், அலங்கார ரதத்தில் எழுந்தருளினாா். மண்வெட்டி உள்ளிட்டவற்றை வைத்து சிவாச்சாரியா்கள் பூஜை நடத்தினா். பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஜடாயுபுரீசுவரா் கோயிலில்...: திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயிலிலும் இந்த உத்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் கோயிலுக்குள் எழுந்தருளினா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தனி அலுவலா் வீரச்செல்வம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.