பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காரைக்கால் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த உத்ஸவம்

பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில் 

News image

தலையில் மண்சட்டி சுமந்து காட்சி தரும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:43 pm IST

காரைக்கால்: பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில் மண்சட்டி சுமந்த வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில், ஒவ்வோா் ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று சின்னக்கண்ணு செட்டித் தெருவில் உள்ள வாய்க்காலுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளி, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, கரோனா பரவலால், கோயிலுக்குள் இந்த வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் தலையில் மண்சட்டி சுமந்த கோலத்தில், அலங்கார ரதத்தில் எழுந்தருளினாா். மண்வெட்டி உள்ளிட்டவற்றை வைத்து சிவாச்சாரியா்கள் பூஜை நடத்தினா். பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஜடாயுபுரீசுவரா் கோயிலில்...: திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயிலிலும் இந்த உத்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் கோயிலுக்குள் எழுந்தருளினா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தனி அலுவலா் வீரச்செல்வம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.