2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளா் அரசு. வணங்காமுடி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் பொன். செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ப. மதியழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம், தமுமுக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளா் விடுதலைக்கனல் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.