காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 15 ஆம் தேதி 114 பேருக்கு பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, திருப்பட்டினம் 2, கோட்டுச்சேரி 1 என 3 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 50,025 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,711 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,594 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 43 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 10 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com