வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

காரைக்கால் பகுதியில் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

News image
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் வழியே ரத்னாங்கி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்.
Updated On :26 டிசம்பர் 2020, 2:28 am

DIN

காரைக்கால் பகுதியில் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாா். உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய பகல்பத்து வழிபாடு நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, இராப்பத்து வழிபாடு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலை 5.30 மணிக்கு ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ரத்னாங்கியில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது கோயிலில் உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்த பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனா். பிறகு, தாயாா் சந்நிதி முன்பாக நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளினாா்.

மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளுக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனா்.

இதேபோல, காரைக்கால் ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் கோயிலில் கோதண்டராமா் காலை 7 மணிக்கு கண்ணாடி சேவையில் காட்சியளித்தாா்.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். இக்கோயிலில் சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியிலும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.